பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியான நிலையில் தற்போது பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சா கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், நான் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.மேலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன என மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில், தேசிய சட்டமன்ற உறுப்பினர் முனீர் கான் ஓராக்ஸாய் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். க்பர் பகுன்க்வா சட்டமன்றத்தின் எட்டு உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கைசருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர், சபாநாயகர் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் இதுவரை கொரோனாவால் 231,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 131,649 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும், 4,762 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…