உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.102 பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டவர்களில் 5,835 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் கனடா பிரதமரை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்_ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் கோம்ஸ் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஸ்பெயின் சமத்துவத்துறை அமைச்சருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…