மலைசியாவில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இதுவரை 1,38,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 555 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்தநிலையில், மலாக்கா, ஜோகூர், பினாங்கு, சிலாங்கூர், சாபா ஆகிய 5 மாநிலங்களிலும், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய இடங்களில் நாளை முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்து அந்நாட்டு பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டங்களுக்கிடையிலான பயணங்களுக்கு அனுமதி இல்லை. வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி உண்டு. ஒரு வாகனத்தில் இருவர் மட்டுமம் செல்ல வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் பயணம் செய்துகொள்ள அனுமதி விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…