சீனாவில் தற்போது டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சமயத்தில் சீனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தியதாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாஞ்சிங் விமான நிலையத்தில் 9 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சீனாவின் 12 க்கும் அதிகமான மாகாணங்களில் 20க்கும் அதிகமான நகரங்கள் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் தினசரி சீனாவில் லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனுடன் புதிய பயண தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா கொரோனா பரவிய நாஞ்சிங் நகரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…