உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு அதிகரித்து வருகிறது.இதனால்,மக்கள் பலர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல்,சாலைகளில் நடக்கும்போது கூட செல்போனை மட்டுமே பார்த்துக்கொண்டு நடக்கின்றனர்.இதன்காரணமாக, விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில்,தென் கொரியாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் என்பவர்,சாலைகளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும் வகையில்,மனிதனின் கண்ணைப் போன்ற ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.
மேலும்,நெற்றியில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியானது “மூன்றாவது கண்” என அழைக்கப்படுகிறது.
ஏனெனில்,இந்த கண் போன்ற கருவியில் 2 மீட்டர் தூரத்திற்குள் எதிரே வரவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில்,கைரோ என்ற சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதனால்,சாலைகளில் செல்போன் பயன்படுத்திக்கொண்டே செல்பவர்களுக்கு இந்த கருவியானது பயனுள்ளதாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் தெரிவித்துள்ளார்.
எனவே,இந்த கருவியானது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…