முதலில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி கைவிடப்பட்ட படத்தின் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் இணைந்து காக்கா முட்டை உட்பட பல படங்களை தயாரித்தும் வெற்றியை பெற்றிருந்தது.
இவர்களது கூட்டணியில் முதலாவதாக வெளியான திரைப்படம் என்று பொல்லாதவன் படத்தை நினைத்திருக்கிறோம். அப்போதே இந்த படம் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல் ஆகியவற்றுடன் போட்டி போட்டு மாபெரும் வெற்றியை கண்டது. ஆனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் முதல் படம் பொல்லாதவன் இல்லை, முதலில் இவர்கள் இணைந்த படம் ‘தேசிய நெடுஞ்சாலை’ என்று பெயரிடப்பட்டு, அதனையடுத்து சில பல காரணங்களால் கைவிடப்பட்டது. அதனையடுத்து இந்த படம் சில வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் அவர்களின் உதவி இயக்குநரான மணிமாறன் இயக்கத்தில் உதயம் என்ச்4 என்ற பெயரில் வெளியாகியது. இதில் சித்தார்த் அவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் முதலில் உருவான படத்தின் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருந்த இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யவிருந்தார். தற்போது தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் போஸ்ட்ரை தீயாய் பரப்பி வருகின்றனர்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…