காலை நேரத்தில் ஏதாவது தினமும் வித்தியாசமானதாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். அதற்காக தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என செய்ததையே செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, புதிதாக ஏதாவது ஒன்று செய்தால் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இன்று எப்படி வெண்ணெய் புட்டு செய்வது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
அரைக்க : முதலில் புழுங்கல் அரிசி 2 கப் எடுத்து இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதை நைஸாக அரைத்துக் கொள்ளவும். அது போல கடலை பருப்பை ஊறவைத்து அவித்து கொள்ளவும்.
கலவை : ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து வெந்நீரில் மாவை கொட்டி நன்றாக கிளறவும். வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவும். அதன்பின் வெல்லப் பாகு தயாரித்து அதையும் மாவுடன் கலந்து கொள்ளவும்.
புட்டு : நெய்யில் முந்திரி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் நாம் கிளறி வைத்துள்ள மாவையும் சேர்த்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும். வெண்ணெய் போல திரண்டு வந்ததும், ஒரு தட்டில் போட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான வெண்ணெய் புட்டு தயார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…