தினமும் ஆளி விதையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா…?

Published by
Rebekal

ஆளி விதை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது நமக்கு தெரிந்தாலும், தற்போதைய நவீன காலகட்டத்தில் இந்த ஆளி விதைகளை பயன்படுத்துவதை நாம் மறந்துவிட்டோம். இந்த ஆளி விதையில் ஒமேகா-3, பைபர் போன்ற பல கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது நமது உடலுக்கு மட்டும் அல்லாமல், நமது சருமம் மற்றும் முடியை வளர செய்யவும் பளபளப்பாக்க மாற்றவும் உதவுகிறது. இதன் நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

முடி வளர்ச்சி

இந்த ஆளி விதைகளை நாம் தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது, இவை நமது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இவற்றில் வைட்டமின் பி அதிக அளவில் காணப்படுவதால், இது முடியை கருமையாக மாற்றவும், உடைந்த முடியை வளர்ச்சி அடைய செய்யவும் உதவுகிறது.

சரும பொலிவு

 

இந்த ஆளி விதை நமது சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே இந்த ஆளி விதைகளை நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது முகத்தில் இழந்த பொலிவை பெற உதவுகிறது.

அலர்ஜிகள்

இந்த ஆளி விதையில் ஒமேகா 3 காணப்படுவதால் இது நமது உடலில் ஏற்படக்கூடிய தடிப்புகள், சொறி சிரங்கு போன்றவற்றை நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. இது நமது சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் தேவையற்ற கருமை நிறங்களை மறைப்பதற்கும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

இந்த ஆளி விதையை வறுத்து பொடியாக்கி சாப்பிடலாம். இந்த பொடியை காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கலந்தும் குடிக்கலாம். இது நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இவற்றை நமது அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கலாம். பெரும்பாலும் இது இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago