தனுஷ் நடிக்கவுள்ள D44 திரைப்படத்தில் நடிகர் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது 44 (D44) வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, D44 திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹன்ஷிகா, நித்தியா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகிய மூன்று பேரும் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகை ஹன்ஷிகா தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…