செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா …? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

Published by
Rebekal

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.

அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில  செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நமது உணவும், வாழ்க்கை முறையும் தான்.

சில சமயங்களில் நாம் அறியாமல் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகள் நமது செரிமான அமைப்பை பெருமளவில் பாதித்து விடுகிறது. செரிமானம் பாதிப்பு ஏற்படுவதற்கான சில காரணங்கள் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

உணவுக்குப் பின் குளியல்

மருத்துவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு நபரும் உணவுக்கு பின் மற்றும் முன் செய்யக்கூடிய செயல்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் நாம் தவறாக நடந்து கொள்ளும் பொழுது நமது உள்ளுறுப்புகளில் சில பாதிப்புகள் ஏற்படலாம். உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் குளிக்கக் கூடாது என கூறப்படுகிறது.

நமது உணவை ஜீரணிக்க கூடிய உறுப்புகள் உஷ்ணம் உள்ளதாக இருக்குமாம். எனவே, அவை சாப்பிட்ட பின்பு தானாகவே செயல்படுமாம். ஆனால் நம் சாப்பிட்ட உடன் குளிக்கும் பொழுது, நமது உடலின் வெப்பநிலை குறைவதால் செரிமான அமைப்பும் மெதுவாக செயல்பட்டு செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வேகமான நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது ஒரு நல்ல உடற்பயிற்சி என்று அனைவருமே அறிந்தது தான். ஆனால் சாப்பிட்டவுடன் வேகமாக நடப்பது நமது செரிமானத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது. அதாவது சாப்பிட்ட பின்பதாக நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதோ, நீச்சல் பயிற்சிகள் மேற்கொள்வதோ நமது செரிமான அமைப்பை பாதிக்கும் என கூறப்படுகிறது. எனவே சாப்பிட்டு சில மணி நேரங்களுக்கு வேகமான நடைபயிற்சி எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறப்படுகிறது.

இரவில் தயிர் சாப்பிடுதல்

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஒரு உணவு. ஆனால், தயிரை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இது தொடர்பாக கூறும் மருத்துவர்கள் தயிர் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை உள்ளதால் இவை உடலில் பித்தம் மற்றும் வாத தோஷத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது நமது செரிமான மண்டலத்தை பாதித்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Recent Posts

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

36 minutes ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

2 hours ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

3 hours ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

3 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

4 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

4 hours ago