பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் உள்ள சலு மாகாணத்தின் தலைநகரான ஜோலோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். முதலில் ஜோலோவில் உள்ள மளிகை கடை ஒன்றின் முன்பு நண்பகல் 12 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனையடுத்து அங்கிருந்து 70 மீட்டர் தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றின் முன்பு முதல் வெடிகுண்டு வெடித்த ஒரு மணி நேரம் கழித்து இரண்டாவது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது , மேலும் இதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துகிறது. பிலிப்பைன்ஸில் நடந்த இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…