கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட இந்த ஜூஸ் குடிங்க….!

Published by
லீனா

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பீட்ரூட் ஸ்மூத்தி செய்வது எப்படி?

இன்று நாடெங்கும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. எனவே ஆரோக்கியமான உணவை பின்பற்றி, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். மேலும் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த உணவியல் நிபுணர் சயனிகா ஷர்மா கொரோனாவை எதிர்த்து போராட, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க செய்ய  பீட்ரூட் ஸ்முத்தி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சரியாக அமைவதுடன், ஆக்சிஜன் அளவு அதிகரிக்க உதவுகிறது.

தேவையானவை

  • பீட்ரூட் – 1
  • தக்காளி – 2
  • எலுமிச்சை – 1

செய்முறை

முதலில் ஒரு பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக கழுவி, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின் 2 தக்காளியை எடுத்து அதனையும் சிறிய துண்டுகளாக வெட்டி பீட்ரூட் மற்றும் தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவேண்டும். இப்போது சத்தான சுவையான பீட்ரூட்  ஸ்முத்தி தயார்.

நன்மைகள்

பீட்ரூட் அலர்ஜி எதிர்ப்பு பானம் மற்றும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது ஆகும். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த பானமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் பைபர், போலேட், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. தக்காளியில் பொட்டாசியம் வைட்டமின் பி மற்றும் ஈ மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இது நமது செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது.

Published by
லீனா

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

7 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

8 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

8 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

8 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

10 hours ago