ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அமைத்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேமற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை பதவி விலக கோரி மக்கள் போராத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில்,பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக சிறந்த பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நியமித்துள்ளார்.அதன்படி, இக்குழுவில் இடம் பெற்றவர்கள் கீழ்க்கண்டவாறு:
• டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி – முன்னாள் ஆளுநர்,இலங்கை மத்திய வங்கி மற்றும் பொது செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர்.
• பேராசிரியர்.சாந்தா தேவராஜன்– ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயிற்சிப் பேராசிரியர் மற்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர்,உலக வங்கி.
ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்கள் இலங்கை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஈடுபடும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், தற்போது நாட்டில் நிலவும் கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து,இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கு வழிவகுக்கும் வழிகாட்டல்களை வழங்குவர் என்று கூறப்படுகிறது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…