போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் வெடித்த கலவரம்.!

Published by
மணிகண்டன்

ஈக்வடார் நாட்டில் கைது செய்யப்பட்டு குவாயாகில் சிறையில் இருந்த பிரபல போதை பொருள் கடத்தல் தலைவன் அடோல்போ மசியாஸ் கடந்த ஞாயிற்று கிழமை காணாமல் போனார். இதனை தொடர்ந்து அடோல்போ மசியாஸ் இறந்துவிட்டதாக கருதி ஈக்வடார் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகள்  சிறையினுள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன?

மேலும், ஈக்வடார் நாட்டின் வெளியிலும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதனால் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். குவாயாகில் (Guayaquil ) உள்ள ஒரு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் புகுந்த கலவரக்காரர்கள் துப்பாக்கி முனையில் பலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர். மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட வீடியோவும் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பள்ளிகளில் ஆசிரியர்களையும், மாணவர்களையும், பல்வேறு இடங்களில் பொதுமக்களை அடோல்போ மசியாஸ் ஆதரவாளர்கள் துப்பாக்கி முனையில் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஈக்வடார் நாட்டின் பிரதமர் டேனியல் நோபோவா நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் , நாட்டின் பாதுகாப்புப்படை, ஆயுதப்படையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

திங்களன்று அந்நாட்டு பிரதமர் நோபோவா கூறுகையில், நீங்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்தீர்கள். நாங்கள் அதனை கொண்டு உங்களுக்கு பதிலடி தருவோம். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அனைத்து ஈக்வடார் மக்களுக்கும் அமைதி திரும்பும் வரை நாங்கள ஓய்வெடுக்க மாட்டோம் என நோபோவா தெரிவித்துள்ளார்.

Recent Posts

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

24 minutes ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

1 hour ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

4 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago