இங்கிலாந்து பிரதமருக்கு பிறந்த ஆண் குழந்தை… கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்திய ஜான்சன்…

Published by
Kaliraj
இங்கிலாந்து நாட்டின்  பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவியான  கேரி சைமண்ட்ஸ் ஆகிய இரு தம்பதிகளுக்கும்  சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர்களின் செய்தி தொடர்பாளர், தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் போது  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் கடந்த வாரம் பணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களது பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார் போரிஸ் ஜான்சன்.  இதுதொடர்பாக,இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி கேரி சைமண்ட்ஸ் ஆகியோர் தங்களது  இன்ஸ்டாகிராமில் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்பால், போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்தபோது தீவிர சிகிச்சை அளித்து வந்த இரு டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் குழந்தைக்கு நிக்கோலஸ் என்ற  பெயரையும்  சேர்த்து வில்பிரட் லேவெரி நிக்கோலஸ் ஜான்சன் என தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளோம் என அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

7 minutes ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

47 minutes ago

சிரியாவுக்கு 41% இறக்குமதி வரி – ஷாக் கொடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…

1 hour ago

கேரளா : பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன் – ஜூலைக்கு மற்ற அரசு திட்டம்?

கேரளா :  கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…

2 hours ago

இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது – மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

சென்னை :  மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), இன்று (ஆகஸ்ட் 1 ) முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை…

2 hours ago

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

16 hours ago