எனக்கு எண்டே கிடையாது என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையில், நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தி அறிவிப்பை இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு பத்திரிக்கையாளர் களை சந்தித்து அறிவித்தனர். அதில் பேசிய வடிவேலு ” என் பயணம் இனி நகைச்சுவை பயணமாகவே இருக்கும். சிரிக்க வைத்துக் கொண்டே கடைசி வரை மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி அவரை பார்த்த நாள் முதல் எனக்கு நல்லது நடக்கிறது. சீக்கிரம் படங்களில் நடிக்க வேண்டும் என முதல்வர் கூறியது மறக்க முடியாது.
என்னை முடக்க நினைத்தவர்களுக்கெல்லாம் நான் சொல்வதெல்லாம் ஒன்று தான் எனக்கு எண்டே கிடையாது….வரலாற்று சம்பந்தப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்கவே மாட்டேன்..அரசியலை விட மக்கள் விருப்பப்படி, திரையில் நடிப்போம் என வந்து விட்டேன். இப்போது சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். வெப்சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை” என கூறியுள்ளார்.
இன்று நடிகர் வடிவேலு தனது 61-வது பிறந்தநாளை கொண்டு வருகிறார்கள். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…