Ex-ஹஸ்பன்டின் மனைவியை அவதூறாக பேசிய ரசிகை.! பதிலடி கொடுத்த காஜல் பசுபதி.!

Published by
Ragi

சாண்டியின் இரண்டாவது மனைவியை அவதூறாக பேசிய ரசிகைக்கு தவறு என் மீது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் காஜல் பசுபதி.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் காஜல் பசுபதி. இவர் மௌனகுரு, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் நடன இயக்குனரான சாண்டி மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் கடந்த 2012ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். காஜல் சாண்டியின் மீது வைத்திருந்த அதிக அன்பு தான் பிரிவுக்கு காரணம் என்று பல பேட்டிகளில் காஜல் கூறியிருப்பார்.

இந்த நிலையில் சமீபத்தில் சாண்டியின் இரண்டாவது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு ரசிகர்கள் பலர் கமென்ட் செய்து வர ஒரு ரசிகை சாண்டியின் மனைவியை அவதூறாக பேசி காஜலுக்கு ஆதரவளித்து பேசியுள்ளார். இதற்கு காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் தயவுசெய்து சாண்டி மற்றும் அவரது மனைவியை விட்டு விடுங்கள். நான் உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்வது, நாங்கள் பிரிந்ததற்கு காரணம் எனது தவறு மட்டுமே, நான் அவருக்கு மன நிம்மதியை கொடுக்கவில்லை. நாங்கள் 2012ல் பிரிந்து விட்டோம். அவரது மனைவிக்கு எங்களது விவாகரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாண்டி இப்போது என் கணவர் இல்லை என்றும் கூறியுள்ளார். தற்போது காஜலின் இந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Published by
Ragi

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago