சவுதியில் நாய்களுக்காக திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே.
சவுதி அரேபியாவில் நாய்களுக்காக அட்டகாசமாக உணவருந்த கூடிய விடுதி போன்ற ஒரு கஃபே ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தீ பார்க்கிங் லாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடையை குவைத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபிய வந்தபொழுது நாயுடன் கடற்கரையில் நடந்து செல்ல ஆசைபட்டேன். ஆனால் எனக்கு மட்டும்தான் அனுமதிக்கப்பட்டது, எனது நாயை கடற்கரை ஓரத்தில் அழைத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல இங்கே இருப்பவர்களும் வருந்துவதை நான் உணர்ந்தேன். எனவே நாய்களும் நாயின் உரிமையாளர்களும் ஒரே இடத்தில் சந்திக்க கூடிய வகையில் தற்போது காஃபே ஒன்றை திறந்து வைத்துள்ளேன்.
இதனால் நாய்களுடன் அவர்கள் நிறைய நேரத்தில் செலவு செய்ய முடியும் என கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூறும்போது, நாங்கள் எங்களது வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளோம். ஆனால், வெளியில் அதிகம் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படாததால், நேரம் ஒதுக்கவும் முடியாது. அரேபியாவில் முதன் முறையாக நாய்களுக்கான இந்த கடை திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதனால் எங்கள் நாய்களுடன் நேரத்தை செலவிடுவது மட்டுமல்லாமல் எங்கள் நாய்கள் பிற நாய்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளவும் இது உதவியாக உள்ளது என கூறியுள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…