ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் கண்ணாடி நிறுவனத்துடன் இணைந்து தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரேபான் ஸ்டோரிஸ் எனும் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடியில் 5 மெகாபிக்சல் கேமரா, ஓபன் இயர் ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் உள்ளது. மேலும் இந்த கண்ணாடி மூலமாக 30 செகண்ட் வீடியோவையும் உருவாக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால்,இந்த கண்ணாடிகளை உபயோகிப்பதால் தனிமனித உரிமைகளுக்கு ஏதேனும் பாதுகாப்பின்மை ஏற்படுமோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்த கண்ணாடி 20 வகைகளில் கிடைக்கிறதாம். இந்த கண்ணாடி மூலமாக நாம் மொபைல் அழைப்புகளை ஏற்கலாம், இசைகளும் கேட்கலாம். மேலும் இவை இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடியின் விலை 299 அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 21,981 ரூபாய். ஆனால், இந்த கண்ணாடியில் AR அப்ளிகேஷன் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடி ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…