ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் கண்ணாடி நிறுவனத்துடன் இணைந்து தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரேபான் ஸ்டோரிஸ் எனும் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடியில் 5 மெகாபிக்சல் கேமரா, ஓபன் இயர் ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் உள்ளது. மேலும் இந்த கண்ணாடி மூலமாக 30 செகண்ட் வீடியோவையும் உருவாக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால்,இந்த கண்ணாடிகளை உபயோகிப்பதால் தனிமனித உரிமைகளுக்கு ஏதேனும் பாதுகாப்பின்மை ஏற்படுமோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்த கண்ணாடி 20 வகைகளில் கிடைக்கிறதாம். இந்த கண்ணாடி மூலமாக நாம் மொபைல் அழைப்புகளை ஏற்கலாம், இசைகளும் கேட்கலாம். மேலும் இவை இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடியின் விலை 299 அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 21,981 ரூபாய். ஆனால், இந்த கண்ணாடியில் AR அப்ளிகேஷன் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடி ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…