கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் வேலை கிடையாது என பிஜி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா உலக நாடுகளை பெருமளவில் பாதித்து வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நாட்டுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதில் நாடுகளும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் தடுப்பூசி போடுவதற்காக ஒரு முடிவை அறிவித்துள்ளனர். பிஜி தீவில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் வேலை கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பிராங் பைனிமராமா, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அரசு பணியில் இருப்பவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். மேலும், நவம்பர் 1-ஆம் தேதிக்குள் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும். அப்படி இல்லையெனில், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…