தடுப்பூசி போடவில்லையெனில் வேலை கிடையாது-பிஜி அரசு..!

Published by
Sharmi

கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் வேலை கிடையாது என பிஜி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா உலக நாடுகளை பெருமளவில் பாதித்து வருகிறது. அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நாட்டுமக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைப்பதில் நாடுகளும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் தடுப்பூசி போடுவதற்காக ஒரு முடிவை அறிவித்துள்ளனர்.  பிஜி தீவில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் வேலை கிடையாது என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பிராங் பைனிமராமா, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

அரசு பணியில் இருப்பவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். மேலும், நவம்பர் 1-ஆம் தேதிக்குள் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும். அப்படி இல்லையெனில், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

47 minutes ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

1 hour ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

1 hour ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

2 hours ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

2 hours ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago