புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்ததாக பிரபல நடிகை கைது..!

Published by
லீனா

கொல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பிக்பாக்கெட் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், நடிகையின் பையில் இருந்து 65,760 ரூபாய் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ரூபாவால் சரியான பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் நெரிசலான கண்காட்சிக்குள் பிக்பாக்கெட் அடித்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் இதே செய்வது இது முதல் முறை அல்ல என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவரது பையிலிருந்து போலீசார் நாட்குறிப்பை கண்டுபிடித்தனர். அதில் அவர் திருடியதற்கான கணக்கை பராமரிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிதான்நகர் வடக்கு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்யா நாத் சாஹாவின் புகாரின்படி, நடிகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379/411-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் ஒரு நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ரூபா தத்தா டோலிவுட் (வங்காளத் திரையுலகம்) மற்றும் பாலிவுட் இரண்டிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago