முக கவசம் அணியாமால் வாழ ஏங்குகிறேன் என்று நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் . இதன் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது ” கொரோனா வைரஸ் தாக்கம் நம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவிற்கு முன்னாள் அனைவரும் சமம் தான் இதில் பணக்காரர் ஏழை என்று வேறுபாடு இல்லை. கொரோனா அனைவரையும் தாக்கி வருகிறது. முன்பு சுதந்திரமாக சுற்றி திரிந்தோம் இப்போது அப்படி சுற்ற முடியவில்லை.
இந்த காலகட்டத்தில் முகக்கவசம் கண்டிப்பாக முக்கியமான ஒன்று . விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அணிய வேண்டும். பாதுகாப்புக்கு எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் நங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டியுள்ளது.
எங்களை எதோ ஒரு பயம் பின் தொடர்ந்து வருவதாக உணர்கிறேன். முன்பை போல் எங்களால் படப்பிடிப்பில் கூட சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த மாதிரி பல வேதனைகள் என்னிடம் இருக்கிறது. முக கவசம் அணியாமால் வாழ ஏங்குகிறேன் ” என்றும் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…