ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பாதிக்கட்ட காட்சி மட்டும் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதால் இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஜன கன மன படத்தில் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹாலிவுட் அளவிற்கு சண்டைக்காட்சி இடம்பெறும் என்பதால் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த படத்தில் பணியாற்றிவருகிறார்கள். கடந்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…