அனிருத் அவர்களால் வெளியிடப்படும் ‘பெங்குயின்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!

Published by
Ragi

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அனிருத் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களாலும், இந்த படத்தின் டிரைலரை தனுஷ், மோகன்லால், நானி ஆகிய முன்னணி நடிகர்களால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை அனிருத் அவர்களால் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Published by
Ragi

Recent Posts

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…

1 minute ago

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

27 minutes ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

1 hour ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

2 hours ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

3 hours ago