ஜப்பான்னில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை வெற்றி.. 2023- ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்!

Published by
Surya

ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது.

சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்கவும், அதற்கு மாற்றுத் தீர்வு காணவும், போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும், உலக நாடுகள் பல பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு எஸ்.டி- 03 என பெயரிட்டனர்.

இந்த பறக்கும் கார் பார்ப்பதற்கு பெரிய சைஸ் ட்ரான் போல காட்சியளிக்கிறது. இந்த காரில் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பறக்கும் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பறக்கும் கார், தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பி 4 நிமிடங்கள் வானத்தில் பறந்தது.

இதுகுறித்து ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், இந்த பறக்கும் காரில் அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்டுள்ளது எனவும், அதனை 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டதாக விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்தே அப்படியே மேல் எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதாகவும், அதற்கென ஓடுபாதை எதுவும் தேவையில்லை என கூறினார்.

அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு இது உதவுவதாகவும், இந்த பறக்கும் கார், வரும் 2023- ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இதன் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்ந்து சவாலாக இருப்பதாக கூறினார்.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago