ஜப்பான்னில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை வெற்றி.. 2023- ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்!

Published by
Surya

ஜப்பானில் உள்ள ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், முதல் முறையாக பறக்கும் கார் ஒன்றை உருவாக்கி, அதனை பறக்கவிடப்பட்ட சோதனையில் வெற்றிபெற்றது.

சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்கவும், அதற்கு மாற்றுத் தீர்வு காணவும், போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும், உலக நாடுகள் பல பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கை டிரைவ் எனும் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை உருவாகியுள்ளது. அதற்கு எஸ்.டி- 03 என பெயரிட்டனர்.

இந்த பறக்கும் கார் பார்ப்பதற்கு பெரிய சைஸ் ட்ரான் போல காட்சியளிக்கிறது. இந்த காரில் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை பறக்கும் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பறக்கும் கார், தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பி 4 நிமிடங்கள் வானத்தில் பறந்தது.

இதுகுறித்து ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், இந்த பறக்கும் காரில் அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்டுள்ளது எனவும், அதனை 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டதாக விரைவில் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்தே அப்படியே மேல் எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதாகவும், அதற்கென ஓடுபாதை எதுவும் தேவையில்லை என கூறினார்.

அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு இது உதவுவதாகவும், இந்த பறக்கும் கார், வரும் 2023- ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இதன் பாதுகாப்பு விஷயங்கள் தொடர்ந்து சவாலாக இருப்பதாக கூறினார்.

Published by
Surya

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

7 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

52 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago