உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது.
உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதனிடையே,ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான தடைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனில் ரஷ்யா பிடிக்கும் இடங்கள் அங்கீகரிக்கப்படாது என ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது .40 ஆண்டுகளில் முதல் முறையாக ஐக்கிய நாடுகளின் பொதுசபையின் அவசரக்கூட்டம் நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நடைபெற்ற அவசர கூட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் ஆதரவு தந்த நிலையில் ரஷ்யா அதை எதிர்த்தது.
மேலும்,பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற 3 நாடுகளான இந்தியா,சீனா,ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.இந்த சூழலில்,உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்பாக இன்று ஐ.நா.வின் பொதுசபை அவசரமாக கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…