பிரான்ஸில் வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கை விலக்கி கொள்வதாக அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
பிரான்சில் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்களில் இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் நேற்று மட்டுமே 178 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், பிரான்சில் வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கை விலக்கிக் கொள்ளப் போவதாக பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்துள்ளார். மேலும், பாரிஸ் நகரில் தொற்று அதிகமாக உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என கூறியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…