அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்…! சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருது அறிவிப்பு…!

Published by
லீனா
  • அமெரிக்காவில் டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்.
  • சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிப்பு.

அமெரிக்காவில், மின்னப்போலிஸ் நகரில், கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து, பிளாய்டின் கழுத்தில் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை டார்னெல்லா பிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்துள்ளார். அவருக்கு வயது 17.

ஜார்ஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியுலகிற்கு தெரிவதற்கு இந்த வீடியோ தான் முக்கிய காரணமாக அமைந்தது. உலகம் முழுவதும் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவல் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து, போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு வழக்கு விசாரணை முடிந்து, தண்டனையும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவை பதிவு செய்த டார்னெல்லா பிரேசியர் இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1917-ஆம் ஆண்டு புலிட்சர் விருதானது, ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு தான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளம்பெண் டார்னெல்லா பிரேசியருக்கு ஊடகப் பிரிவில் புலிட்சர்  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

43 minutes ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

44 minutes ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

2 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

3 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

5 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

6 hours ago