டெல்டா வகை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முதலாக பி1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இங்கிலாந்தில் இந்த உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸால் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…