நடிகர் சூரி உடன்பிறப்பே படத்தில் நடித்தது குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சூரி. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இதைதவிர்த்து, அண்ணாத்த, ராமின் அடுத்த திரைப்படம், வேலன், டான், உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில், உடன்பிறப்பே படத்தை இயக்குனர் இரா.சரவணன் இயக்குகிறார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தில் நடித்தது குறித்து நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்திலுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “உடன்பிறப்பே இப்படி ஒரு குடும்பத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி நன்றி இரா.சரவணன் அண்ணன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…