397 ஆண்டுகளுக்கு பின் வானில் நிகழும் அதிசயம்.. டூடுலை மாற்றிய கூகுள்!

Published by
Surya

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில் இன்று வானில் நிகழும் அற்புதம் காரணமாக தனது டூடுலை மாற்றியுள்ளது.

397 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரவு வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று மாலை ஒரே கோளாக காட்சியளிக்க உள்ளது. பொதுவாக இரு கோள்களுக்கு இடையிலான ஒருங்கமைவு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியதாகும். ஆனால் இன்று வரக்கூடிய இந்த அறிய நிகழ்வு, கடந்த 1623 ஆம் ஆண்டில் நடந்தாக. இது 397 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு கோள்களும் ஒரே புள்ளியாக தோன்றினாலும், அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 73 கோடி கி.மீ. இருக்கும்என ஆய்வாளர்கள் கூறினார்கள். இன்று மாலை 5.45 மணிக்கு மேல் மேற்கு வானத்தில் அவற்றிற்கு இடைப்பட்ட கோணத்தில் 1 டிகிரியில் 10ல் ஒரு பங்காக குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால், அவைகள் ஒரே கோளாக காட்சியளிக்கவுள்ளது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் (Jupiter) கோள் பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சனி (Saturn) கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிகழ்வினை நாம் வெறும் கண்களால் காணலாம் எனவும், இதனால் நம் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில் இன்று வானில் நிகழும் அற்புதம் காரணமாக கூகுள், தனது டூடுலை மாற்றியுள்ளது. அதில் இன்று வானில் ஒன்றாக காட்சியளிக்கும் வியாழன் மற்றும் சனி கோள்கள் இரண்டும் கடந்து செல்லுமாறு அந்த டூடுல் அமைந்துள்ளது.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

9 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

10 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

10 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago