தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் படமெடுத்து தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடைசியாக அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் தான் வெளியானது. இதனை அடுத்து தற்போது நவம்பர் 29ஆம் தேதி எனை நிக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது.
எனை நிக்கி பாயும் தோட்டா கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மூலமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து, ஐசரி கணேசன் தயாரிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளார்.
இதில், முதல் படமாக வருண் நாயகனாக நடிக்க உள்ள ஜோசுவா எனும் படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து, சூர்யாவை வைத்து கெளதம் இயக்க உள்ள படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதற்கடுத்ததாக அனுஸ்காவை வைத்து ஹீரோயின் மையப்படுத்திய ஒரு படத்தையும் கெளதம் வாசுதேவ் மேனன் ஐசரி கணேசன் அவர்கள் தயாரிப்பில் உருவாக்க உள்ளாராம்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…