கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறக்கூடிய இந்த விழாவில் இசைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போல இந்த ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதி கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜனவரி மாதம் நடைபெறவிருந்த இந்த கிராமிய நிகழ்ச்சி மார்ச் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…