கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு, ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள்.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டர் தன்பெர்க் அவர்கள், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்த நிகிதா ஜேக்கப் அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி, இது தொடர்பாக திஷா ரவியை போலீசார் கைது செய்தனர். டெல்லி நீதிமன்றம், அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், நேற்று திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததையடுத்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் கூறுகையில், விசாரணையின்போது திஷா, நிகிதா மற்றும் சாந்தனு மீது பழி சுமத்துகிறார் என்றும், வரும் 22ஆம் தேதி ஷாந்தனு மற்றும் நிஷாவை நேருக்கு நேர் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு, ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…