இந்தியாவில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க துணை நிற்பதாக கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிறுமி கிரெட்டா துன்பெர்க் மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
ஐ.நா.வில் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து பேசினார். சிறுமியின் பேச்சுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப். சிறுமியின் பேச்சை விமர்சனம் செய்தார். அவரின் அந்த செயல், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சிறுமி கிரெட்டா துன்பெர்க், கொரோனா பரவும் சூழலில், இந்தியாவில் நீட் தேர்வுகள் ஒத்திவைப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், கொரோனா பரவலின் போது, இந்திய மாணவர்களை தேசியத் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது என தெரிவித்தார்.
அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவும் சூழலில் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஒத்திவைக்க அவர்களின் அழைப்போடு நான் துணைநிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…