முடி வெட்டியதால் கொலை மிரட்டல்..! தயாரிப்பாளர் மீது நடிகர் ஷேன் நிகம் புகார்..!

Published by
murugan

மலையாள திரையுலகில் இளம் நடிகரான ஷேன் நிகம்  “கும்பளங்கி நைட்ஸ்” , “கிசுமத்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் “வெயில்” , ” குர்பானி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாள நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நான் “வெயில்” , ” குர்பானி” ஆகிய படங்கள் நடித்து வருகிறேன்.  “வெயில்” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதால்  “குர்பானி” படத்தில் நடித்து வருகிறேன். எனது கெட்டப்பை மாற்ற வேண்டும் என குர்பானி பட இயக்குனர் கூறினார். இதை தொடர்ந்து நான் “வெயில்” பட குழுவின் அனுமதி பெற்று பின்னர் முடிவெட்ட முடிவு செய்தோம்.

பின்னர் எனது புது கெட்டப்பின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். இதைப் பார்த்த  “வெயில்” திரைப்பட தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் முடி வெட்டியதால் உங்கள் கதாபாத்திரத்தில்  தொடர்ந்து தொடர்பு இருக்காது எனக் கூறி செல்போனில் திட்டியுள்ளார்.
மேலும் உன்னை வாழ விடமாட்டேன் என மிரட்டி உள்ளதாக கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் பேசிய தொலை பேசி பேச்சையும் ஆதாரமாக ஷேன் நிகம் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரை தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்துள்ளார். “வெயில்” திரைப்படம் முடியும் வரை முடி வெட்ட கூடாது என ஒப்பந்தம் போட்டோம். அதை  மீறி ஷேன் நிகம் முடி வெட்டி உள்ளார். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நான் இந்த படத்திற்காக வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்து வருகிறேன். நான் அவரை மிரட்டவில்லை. எனது “வெயில்” திரைப்படத்தை முடித்து தராமல் அவரை இழுத்துக் கொண்டே இருக்கிறார் எனக் கூறினார். இதனால் கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

6 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

48 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago