பிரமாண்ட இயக்குனர் என இவரை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும். அந்த பிரமாண்டத்தை பற்றி அவர் கூறுகையில் அந்த கதை களமும் காட்சியமைப்பும் அதற்கான தேவைகளை எடுத்து கொள்கிறது. என கூறி விடுவார். ஆம். அது உண்மையே அவருடைய படங்களை பார்க்கையில், அதில் ஒவ்வொரு பிரமாண்ட காட்சியும் கதைக்கு தேவை என்பதும் தேவையில்லாமல் எந்த காட்சியும் வரவில்லை எனவும் நமக்கு புலப்படும்.
அவர் யோசிக்கும் காட்சிகளும், பாத்திர படைப்புகளும் அதற்க்கான தேவைகளை எடுத்து கொள்கிறது என்பதே நிதர்சனம். படம் தமிழ் படங்களை இந்திய சினிமாவரை உயர்த்தியது. இந்திய சினிமா எடுக்கையில் அதனை உலக அரங்கில் கொண்டு செல்வது. என இவர் எட்டிப்பிடித்த தூரம் இவரது சிந்தனைக்கு நிகரானவையே என்பது உண்மை. இன்னும் அவர் எந்த உயரத்தை தனது இலக்காக வைக்க போகிறார்? அவர் தொடாத உயரம் என்ன என நாம் நினைக்கையில் அதனை தாண்டிதான் அவரது இலக்கு நிச்சயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
அவரது முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் ஏழை மாணவர்களின் கல்வி கனவுகளில் பணமும் அரசியலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது முதல், கடைசியாக வெளியான 2.Oவில், அதீத வளர்ச்சி பெற்ற டெக்னாலஜி நம்மையும் நம்மை சுற்றியுள்ள உயிரினனங்களையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது வரை தனது ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை ஆழமாக பதிய வைத்து வந்துள்ளார். இந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.
கல்வி (ஜென்டில் மேன் ), லஞ்சம் ஊழல் (இந்தியன் ), ஒரு நாள் முதல்வர்(முதல்வன்), தனி நபர் அலட்சியம் ( அந்நியன்), தற்கால மாணவர்கள் ( பாய்ஸ் ),கருப்பு பணம் ( சிவாஜி), எந்திரமயம் ( எந்திரன்), டெக்னலாஜியினால் ஏற்பட்ட பாதிப்புகள் ( 2.O) என ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ஒரு சமூக கருத்தை தனது ஸ்டைலில் நம் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறார் இயக்குனர் ஷங்கர்.
இந்திய சினிமாவின் பிரமாண்ட சொத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசிக்க படும் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தினச்சுவடு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…