வரலாற்றில் இன்று(15.01.2020)… எல்லைச் சாமிகளுக்கான இந்திய ராணுவ தினம் இன்று..

Published by
Kaliraj
  • பல்வேறு பணிகளில்  ஈடுபடும் இந்திய இராணுவத்தின் சேவையை இந்தியர்கள் எவராலும் மறக்கமுடியாது.
  • அத்தகைய எல்லை காவலர்களின் நினைவை போற்றும் நாள் இன்று.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்இந்தியாவின் ராணுவ தலைமை பொறுப்பு ஆங்கிலேயர்  வசம் தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின் 1949ம் ஆண்டு  ஜனவரி 15ல் இப்பொறுப்பை அப்போதைய தலைமை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் ‘கரியப்பா’ ஏற்றார்.

 

Image result for indian army HARD DUTY IMAGES

இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கவும் நினைவு கூறும்  விதமாக ஒவ்வொரு வருடமும் இந்நாளில் ராணுவ தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தன்னலம் பார்க்காமல் நாட்டையும்,நம்  நாட்டு மக்களையும் பாதுகாக்க எல்லையில் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள்.இங்கு  நாம் நிம்மதியாக வாழ, அங்கு அவர்கள் குடும்பத்தை பிரிந்து தனிமையான சூழல் மற்றும் தங்கள் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.

எனவே அவர்களுக்கு நாம் என்றும் நன்றிக்கடன்பட்டவர்கள். எல்லையில் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் இந்திய ராணுவம் ஈடுபடுகிறது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில்  இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்தமாக இராணுவ பலத்தில் உலகில் நான்காவது பெரிய ராணுவமாக இந்திய இராணுவம்  திகழ்கிறது.இந்த இந்திய இராணுவ முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி. தற்போது சமீபத்தில் முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் தற்போது  பிபின் ராவத் உள்ளார்.

ராணுவத்துக்கான கட்டளையை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மற்றும் ராணுவ அமைச்சகம் வெளியிடுகிறது. இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன. இந்திய ராணுவத்தில் 14 லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

 

இந்திய ராணுவம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுடன் நான்கு முறையும், சீனாவுடன் ஒருமுறையும் நேரடியாக  போரில் ஈடுபட்டுள்ளது.இது  தவிர ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் பங்கேற்று பல்வேறு நாடுகளில் அமைதி பணிகளில் ஈடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் இந்த உண்மையான கதாநாயகர்களை நினைவு கூறுவோம்.

Published by
Kaliraj

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

11 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

13 hours ago