தர்பார் படம் இத்தனை கோடி நஷ்டமா.? புலம்பும் விநியோகஸ்தர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ரஜினியின் தர்பார் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சிலரிடமிருந்து கலவையான விமர்சனம் வந்தது.
  • தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது படம் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் சென்று படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி காந்த் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிலர் கலவையான விமர்சனமும் கொடுத்துள்ளார்கள்.

இத்திரைப்படம் பொங்கல் விடுமுறை தினங்களால் செம்ம வசூலை பெற்றது, போட்ட பணம் வந்துவிடும் என்று நினைத்த விநியோகஸ்தர்களுக்கு பிறகு பெரிய இடியாக விழுந்துள்ளது. தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். இதனால், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. ரஜினியின் சமீப கால படங்கள் எதுவும் தற்போதுள்ள நடிகர்கள் விஜய், அஜித் அவர்களின் படங்களுக்கு இணையான வசூலை தமிழகத்தில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago