கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி?- சித்த மருத்துவர் விளக்கம்..!

Published by
Edison

கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சுவாமிநாதன் சிறந்த வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதில் குறிப்பாக,தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி,தேனி அருகே  வடவீரநாயக்கன்பட்டியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதற்காக,சித்த மருத்துவர்கள் சுவாமிநாதன்,சங்கரன்,சிராஜூதீன் மற்றும் செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து,தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சுவாமிநாதன்,கொரோனா வைரஸிலிருந்து குணமடைவது எப்படி? என்பது குறித்து சில வழிமுறைகளை கூறியுள்ளார்.

இதுகுறித்து,சித்த மருத்துவர் சுவாமிநாதன் கூறியதாவது,”ஒரு சிறிய பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீர் ஊற்றி,அதில் மஞ்சள் ஒரு துண்டு,இஞ்சி ஒரு துண்டு மற்றும் ஒரு வெற்றிலை ஆகியவற்றை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.இந்த கொதிக்கும் நீர் 50 மி.லி ஆக வற்றிய பின் அதனை வடிகட்டி குடிக்க வேண்டும்.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இவ்வாறு குடிப்பதால் உடலில் பரவியுள்ள வைரஸின் தாக்கம் குறையும்.

அதன்பின்னர்,காலை 11 மணியளவில் முருங்கைக் கீரை மற்றும் அதன் குச்சிகளை போட்டு ரசம் அல்லது சூப் வைத்து குடிக்க வேண்டும். இதனால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து,வைரஸின் பெருக்கத்தை தடுக்கிறது.

இதனைத் தொடர்ந்து,மாலை 4 மணியளவில் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.மேலும் ஏலக்காய்,கிராம்பு,இலவங்க பட்டை,ஓமம் ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து இரவு 7 மணிக்கு குடிக்க வேண்டும்.

இவ்வாறு,தினமும் 4 வேளை குடிப்பதால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைய முடியும்.மேலும்,கொரோனா வைரஸ் தாக்காமல் தற்காத்துக்கொள்ள முடியும்”,என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

3 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

24 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

38 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago