வெறும் உருளைக்கிழங்கை வைத்து சில மசாலாக்களை சரியான பதத்தில் கலந்து அருமையான சுவையுடன் பொரித்து விற்கப்படக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என அழைக்கிறோம். கடைகளில் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துண்டுகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பதாக ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து இட்லி தட்டில் லேசாக எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள் ஒவ்வொரு வைத்து லேசாக அவித்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பதாக ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த அவித்த உருளைக்கிழங்குகளை கொட்டி ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்னதாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சூடாகியதும் ஏற்கனவே நம் பிரட்டி வைத்த உருளைக் கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்தால் அட்டகாசமான ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வீட்டிலேயே தயார்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…