சுவையான காலிஃப்ளவர் பக்கோடா மாலை நேர ஸ்நாக்ஸாக செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்க போகிறோம் . தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது குறித்து தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.காலிஃப்ளவரில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் காலிஃப்ளவர், வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின் இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.அதன் பின் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்திருக்கும் கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்
தண்ணீர் சூடான பின்னர் அதில் சிறிதளவு உப்பு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு ஒரு மூடி போட்டு மூடி வேக வைக்கவும்.2 நிமிடத்திற்கு பிறகு வேக வைத்த காலிஃப்ளவரில் உள்ள தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,கடலை மாவு, சோள மாவு, ஒரு மேஜைக்கரண்டி கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு, மற்றும் மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து வைக்கவும்.பின்னர் அதில் முன்பே நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் பேஸ்டாக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்த பின்னர் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை அதில் போட்டு நன்கு கலந்து விடவும்.
அடுத்ததாக மிதமான சூட்டில் அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாகிய பின்னர் அதில் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக போட்டு அது பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து பொரித்து எடுக்கவும்.
இப்போது மிகவும் சுவையான மொறு மொறுவான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…