உருளைக்கிழங்கை பயன்படுத்தி வீட்டிலையே மாலை நேர ஸ்நாக்ஸாக பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிடுவது சிலரது வழக்கம் . அந்த வகையில் வீட்டிலையே எளிதாக பிரெஞ்சு ஃபிரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதன் இரண்டு ஓரங்களையும் நறுக்கி விட்டு நீண்ட துண்டுகளாக சிறிது பருமனாக நறுக்கி வைக்கவும்.நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை குளிர் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
சுமார் 12 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை உப்பு கலந்து வைத்துள்ள சுடு தண்ணீரில் போட்டு வைக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் உருளைக் கிழங்கு பொரித்து எடுக்கும் போது உள்ளே நன்றாக வேகும் .அதே போன்று வெளியே நன்கு மொறு மொறுவாக கிடைக்கும்.
அதன் பின் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு சுடு தண்ணீரில் போட்டு வைத்துள்ள உருளைக்கிழங்கை வெளியே எடுத்து அதிலுள்ள தண்ணீரை ஒரு துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
அதனையடுத்து எண்ணெய் மிதமான சூடான பின்னர் அதில் உருளைக்கிழங்கை போட்டு பொரிக்க வேண்டும்.சுமார் 4 நிமிடங்களுக்கு பிறகு எண்ணெயிலிருந்து உருளைக்கிழங்கை வெளியே எடுத்து அதிலுள்ள எண்ணெயை ஊற்றிய பின்னர் சுமார் 20 நிமிடங்கள் வரை ஆறு வைக்கவும் .
அதனையடுத்து மீண்டும் அதிக சூட்டில் எண்ணெய் சூடான பின்னர் அதில் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு பொரிக்க வேண்டும்.உருளைக்கிழங்கு பொன்னிறத்தில் வந்த பின்னர் வெளியே அடுத்து அதில் சிறிது உப்பு கலந்து வைத்தால் மொறு மொறுவான பிரெஞ்சு ஃபிரைஸ் தயார் .
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…