அட்டகாசமான சுவை கொண்ட கல்யாண வீட்டு சேமியா பாயாசம் வீட்டிலேயே செய்வது எப்படி?

Published by
Rebekal

கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சேமியா பாயாசத்தை பலருக்கும் பிடிக்கும். ஆனால் இதை எவ்வாறு வீட்டில் செய்வது என்ற முறையான ஒரு செய்முறை பலருக்கும் தெரியாது. இன்று அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • ஜவ்வரிசி
  • முந்திரி
  • நெய்
  • சர்க்கரை
  • பால்
  • உப்பு
  • ஏலக்காய்த்தூள்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் விருப்பப்படுபவர்கள் பாதாமும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே சட்டியில் சிறிதளவு சேமியா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுக்காமல் சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து களி போலாகிவிடும். எனவே லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு அதே சட்டியில் ஜவ்வரிசியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் வறுத்து வைத்துள்ள ஜவ்வரிசியில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக வேகவைத்து அதன் பின்பு, காய்த்து வைத்துள்ள பாலை சேர்த்து கிளறவும். கொதி வந்ததும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். சேமியா ஐந்து நிமிடத்திற்குள் நன்றாக அவிந்துவிடும். இதற்குள் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான சேமியா பாயாசம் வீட்டிலேயே தயார். இனி சேமியா பாயாசம் சாப்பிடுவதற்காக கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

Published by
Rebekal

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

15 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

56 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago