பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மோலேவே புயலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் . நடப்பாண்டில் மட்டும் 17வது முறையாக புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் மோலேவே புயலில் சிக்கி காணாமல் போன 12 மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது மோலேவே புயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வியட்நாம் நோக்கி நகர்ந்து வருகிறது.எனவே வியட்நாமில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 150கிமீ வேகத்தில் வீசும் என்றும் ,இந்த மோலேவே புயல் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் இந்த மோலேவே புயலால் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டு 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…