ரசிகரின் கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரின் முதல் திரைப்படத்திற்கே தேசிய விருது கிடைத்தது.
இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல பெரிய விருதைகளை பெற்றுள்ளார்.
தற்போது தமிழில், கோப்ரா, பொன்னியின் செல்வன், அயலான், வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் “நீங்கள் எப்போது ஹீரோவாக நடிப்பீர்கள்..?” என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ ஆர் ரஹ்மான் “நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா?” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…