இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட், பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி ஆனது கடந்த 16ஆம் தேதி முதல் மூன்று கோடி முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சார்க் நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கி வருகிற நிலையில், வர்த்தக ரீதியாக சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…