இது உலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தாக கருதுகிறேன் – ஐ.நா.பொது செயலாளர்

Published by
லீனா

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட், பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி ஆனது கடந்த 16ஆம் தேதி முதல் மூன்று கோடி முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சார்க் நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கி வருகிற நிலையில், வர்த்தக ரீதியாக சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

15 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago