ரோட்டுக் கடையில் உணவருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அருண் விஜய் விலகி இருந்தார். தற்போது காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கொண்டுள்ளார்.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பின் போது, மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் நடிகர் அருண்விஜய் உணவருந்த சென்றுள்ளார். அங்கு கடையில் மீன் வறுத்துக்கொண்டிருந்த அம்மாவையே கட்டியணைத்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ” ரோட்டுக் கடையில் உணவருந்திய போது. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன். இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…