எத்தியோப்பியாவுக்கு 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப்.!

Published by
பாலா கலியமூர்த்தி

எத்தியோப்பியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால், மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது ஆப்ரிக்க நாடுகளின் பக்கமும் இந்த வைரஸ் திரும்பியுள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, கேமரூன், அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இங்கு பொருளாதார வளர்ச்சியிலும், மருத்துவ வசதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளை சந்திக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதன் விளைவு காரணமாக மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்த சர்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடனுதவியை எதிர்பார்த்து இருக்கின்றனர். அதுவும், எத்தியோப்பியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 131 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோன பாதிப்பு குறைவாக இருந்தாலும், அங்கு போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இன்னும் சில நாட்களில் வைரசின் தாக்கம் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தியோப்பியாவுக்கு 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்க ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

20 minutes ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

1 hour ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

3 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

4 hours ago