முகக்கவசம் அணியாததற்காக சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல்..! சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கண்டனம்..!

Published by
Edison

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாததால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வன்மையாக கண்டித்துள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய்,ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை விஷ்ணுபாய் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது,ஒரு நபர் அருகில் வந்து விஷ்ணுபாய் தனது முகக்கவசத்தை அணியவில்லை என்று மார்பில் எட்டி உதைத்துள்ளார்.

இதுகுறித்து,விஷ்ணுபாயின் மகள் பர்வீன் கவுர் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,”என்னுடைய அம்மா சோவா சூ காங் டிரைவில் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது,ஒரு நபர் என் அம்மாவின் அருகில் வந்தார்.அப்போது,என் அம்மா அவரைப் பார்த்து “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் “என்று கூறினார்.ஆனால்,அந்த நபர் என் அம்மா முக்கவசம் அணியவில்லை என்று இனவெறியுடன் அவதூறாகப் பேசி மார்பில் எட்டி உதைத்தார்”,என்று கூறினார்.

சிங்கப்பூரில் கொரோனா காரணமாக பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.இருப்பினும்,உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்யும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,முகக்கவசம் அணியவில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறியதாவது,”பாதிக்கப்பட்டவர் ஒரு சிங்கப்பூர்காரராக இல்லை என்றாலும்,இனவெறி தாக்குதல் நடத்தியது தவறான மற்றும் வெட்கக்கேடான செயலாக உள்ளது.இந்த செயலை நான் வன்மையாக கண்டிகிறேன்.இது நமது ஒற்றுமையான சமூகத்திற்கு எதிரானது.மேலும்,நமது சர்வதேச நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கிறது.எனவே,சம்மந்தப்பட்டவர்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்”,என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து,சிங்கப்பூரில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதலைக் கண்டித்தனர்.

சிங்கப்பூரின் உள்ளூர் மக்கள் தொகையில் பாதி பேர் சீனர்களாக உள்ளனர்,அதைத் தொடர்ந்து 15% மலாய்க்காரர்களும் 7.5% இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

2 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

4 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

4 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

5 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

6 hours ago