முகக்கவசம் அணியாததற்காக சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல்..! சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கண்டனம்..!

Published by
Edison

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாததால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வன்மையாக கண்டித்துள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய்,ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை விஷ்ணுபாய் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது,ஒரு நபர் அருகில் வந்து விஷ்ணுபாய் தனது முகக்கவசத்தை அணியவில்லை என்று மார்பில் எட்டி உதைத்துள்ளார்.

இதுகுறித்து,விஷ்ணுபாயின் மகள் பர்வீன் கவுர் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,”என்னுடைய அம்மா சோவா சூ காங் டிரைவில் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது,ஒரு நபர் என் அம்மாவின் அருகில் வந்தார்.அப்போது,என் அம்மா அவரைப் பார்த்து “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் “என்று கூறினார்.ஆனால்,அந்த நபர் என் அம்மா முக்கவசம் அணியவில்லை என்று இனவெறியுடன் அவதூறாகப் பேசி மார்பில் எட்டி உதைத்தார்”,என்று கூறினார்.

சிங்கப்பூரில் கொரோனா காரணமாக பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.இருப்பினும்,உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்யும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,முகக்கவசம் அணியவில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறியதாவது,”பாதிக்கப்பட்டவர் ஒரு சிங்கப்பூர்காரராக இல்லை என்றாலும்,இனவெறி தாக்குதல் நடத்தியது தவறான மற்றும் வெட்கக்கேடான செயலாக உள்ளது.இந்த செயலை நான் வன்மையாக கண்டிகிறேன்.இது நமது ஒற்றுமையான சமூகத்திற்கு எதிரானது.மேலும்,நமது சர்வதேச நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கிறது.எனவே,சம்மந்தப்பட்டவர்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்”,என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து,சிங்கப்பூரில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதலைக் கண்டித்தனர்.

சிங்கப்பூரின் உள்ளூர் மக்கள் தொகையில் பாதி பேர் சீனர்களாக உள்ளனர்,அதைத் தொடர்ந்து 15% மலாய்க்காரர்களும் 7.5% இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago